நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து கோரிக்கை மனு அளித்தது தொடர்பாக அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வலியுறுத்துக!
நேற்று (5.2.2025) அன்று டில்லியில், அனைத் திந்திய இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட் டமைப்பின் செயலாளர் டாக்டர் அமிரிதான்ஷு வுடன் இணைந்து, கணேஷ் சிங், மாணிக்கம் தாகூர் மற்றும் எம். சண்முகம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தோம்: நடந்துகொண்டிருக்கும் நிதி நிலை அறிக்கை விவாதம் தொடர்பான கூட்டத்தொடரில் வலி யுறுத்தக் கோரி பின்வரும் கோரிக்கைகளை வைத்தோம்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) சமமான பதவிகள். எய்ம்ஸ் மற்றும் என்.அய்.டி. உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தில் தள்ளுபடி. . சி எல் ஆர் அய் ரோஸ்டர் முறை மீறல் ஆகியன குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தோம்.
மேலும் இம்மாத ‘ஓ.பி.சி. வாய்ஸ்’ இதழையும் ஒடுக்கப்பட்ட மக்கள் போதுமான பிரதிநித்துவம் பெறுகிறோமா என்ற புள்ளி விவரம் அடங்கிய நூலையும் வழங்கினோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.