சென்னை, பிப்.6- கடந்த 1ஆம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ரயில்வே மண்டலங்களில் அதிக வருவாய் தரும் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டிற்கு மிக குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரயில்வே நிதி பெற்ற பட்டியலில் முதலிடத்தில் மராட்டியமும், 2ஆவதாக உத்தரபிரதேசமும், 13ஆவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு கடந்தாண்டு, இந்தாண்டு ஒதுக்கிய நிதி, அவற்றின் ஒப்பீட்டு அளவில் உள்ள வித்தியாசம் எத்தனை சதவீதம், மாநிலங்களில் இதுவரை எத்தனை கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில்வே தண்டவாளங்கள் இருக்கிறது என்பது குறித்த விவரங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது.