பீகாரில் மேடையிலேயே நடந்த கொடூரம்!

viduthalai
1 Min Read

பீகாரில் திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக ஆடல் பாடலுடன் திலக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அங்குள்ள கயா மாவட்டத்தில் (நேற்று) நடந்த திலக விழாவில் இளம்பெண்கள் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது உற்சாகமிகுதியில் மேடையில் ஏறிய அஞ்சனி குமார் (27) என்பவர் நடனப் பெண்கள் மீது ரூபாய் நோட்டுகளை வீசிக் கொண்டிருக்கையில், அவரை சிலர் சுட்டுக் கொன்றனர். இந்த காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது.

கும்பமேளாவில் 30 பேர் பலி
பெரிய விஷயமல்லவாம்!
பிஜேபி எம்.பி.யின் ஆணவம்

கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தது ஒன்றும் பெரிய சம்பவமல்ல, அதை மிகைப்படுத்தி கூறுகின்றனர் என பாஜக எம்பி ஹேமாமாலினி விமர்சித்துள்ளார். குடும்பத்துடன் சென்று அங்கு நீராடியதாகவும், எல்லாம் சிறப்பாகவும் இருந்ததாக தெரிவித்த அவர், ஏராளமான பேர் அங்கு கூடுவதால், சமாளிப்பது எளிதல்ல என்றார். இதற்கு விஅய்.பி. பாஸ் இல்லாமல், சென்றிருந்தால் உண்மை தெரிந்திருக்கும் என நெட்டிசன்கள் அவரை விமர்சிக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *