சிதம்பரம், பிப். 5- சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், அரியலூர், மயிலாடுதுறை, புதுவை மாநிலம் ஆகிய மாவட்டங்களின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மட்டும் பங்குபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி 4.2.2025 அன்று காலை 11.30 மணிக்கு சிதம்பரம் தெற்கு வாணியத் தெரு, புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்க, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலையேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், கடலூர் மாவட்ட செயலாளர் எழிலேந்தி, விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், அரியலூர் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், செந்துறை மணிவண்ணன், காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், வடலூர் நகர தலைவர் புலவர் இராவணன், மீன்சுருட்டி திலீபன், சிதம்பரம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுமதி பெரியார்தாசன், சிதம்பரம் மாவட்ட செயலர் ப.முருகன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மு.இளமாறன், கொக்கூர் இளஞ்செழியன், மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், சிதம்பரம் மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், பெரியார் படிப்பகத் துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன், கு.தென்னவன், புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இறுதியாக கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீஅன்புராஜ் ஆகியோர் பொதுக்குழுவை எவ்வாறு நடத்துவது என்றும், தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் விளக்கவுரையாற்றினர்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொதுக்குழு நடைபெறவுள்ள ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தைப் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.