சென்னை, பிப்.4 நேற்று (3.02.2025) அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஜாபர்கான் பேட்டை, பிள்ளையார் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு சந்திப்பில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது.
நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென்று அதே பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அஜய் என்பவர், குடிபோதையில் (கோயிலுக்கு மாலை அணிந்து துண்டு போட்டிருந்தார்) மேடை மீது ஏறி, ‘தமிழர்களைக் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் ஒழிக!’ என கத்திக்கொண்டு, தந்தை பெரியார் சிலையினைச் செருப்பால் அடித்திருக்கிறான். இதனைப்பார்த்த பொதுமக்கள் கொதிப்படைந்து அந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அஜயை நையப்புடைத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படத்தனர்.
தகவலறிந்து தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.வினர், ‘‘தமிழ்நாட்டின் பொது அமைதியை குலைக்கும் வகையில் தந்தை பெரியாரைப்பற்றி அவதூறு பரப்பிடும் சீமானின் பேச்சால், இன்று அவரது கட்சியினர் சமூகத்தில் பதற் றத்தினை ஏற்படுத்தும் செயல்க ளில் இறங்கியிருக்கின்றனர். இவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’’ என்று முழக்கமிட்டனர்.
காவல் நிலையத்தில் புகார்
பின்னர் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், பெருநகர சென்னையின் 10 ஆவது மண்டல குழுத் தலைவரும் தி.மு.க. பகுதிச் செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சைதை சுப்பிர மணியன், திராவிடர் கழக வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் மணிதுரை, வழக்குரைஞர் துரை அருண், ம.தி.மு.க. பகுதிச் செயலாளர் எஸ்.வி.குமார், 139 ஆவது வட்ட செயலாளர் வைகோ ராஜ், திமுக 139 ஆவது வட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் பரத்குமார், சஞ்சய், மல்லிகா தயாளன், தி.க, தி.மு.க., ம.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் சூழச் சென்று, குமரன் நகர் காவல் நிலையத்திற்குச் சென்றனர். தி.மு.க. வின் 139 ஆவது வட்டச் செயலாளர் கமலநாதன் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு கொடுத்தார்.
கைது!
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை உடனடியாக நட வடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்துள்ளது.
ெபரியார் சிலை அவமதிப்புத் தகவலறிந்த மதிமுகவின் பொதுச்செயலாளரும், நாடளுமன்ற உறுப்பினருமான திராவிட இயக்கப் போர்வாள் வைகோ கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.