புதுடில்லி, பிப். 4- மாநிலங்கள் அவையில் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதமும் குடியரசு தலைவர் உரைமீதான விவாதமும் நடந்துகொண்டு இருந்தது.
ஒன்றிய அரசின் குறைகளை புள்ளிவிவரத்தோடு சொல்லிகொண்டு இருக்கும் போது அவரது பேச்சை திசை திருப்ப பாஜக மாநிலங்கள் அவை உறுப்பினர் நீரஜ் சேகர் இடை இடையே பேசிகொண்டே மல்லிகார்ஜுன் கார்கேவின் உரைக்கு இடையூறு செய்துகொண்டு இருந்தார்.
பொதுவாக ஆளும் தர்பபு பேசும் போது எதிர் தரப்பினர் தான் முழக்கம் எழுப்புவார்கள். ஆனால் இங்கே எதிர்க்கட்சி மாநிலங்களவைத் தலைவர் பேசும் போது ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இடையூறு செய்துகொண்டே இருந்தார்.
இந்த நிலையில் தனது உரையை சில வினாடிகள் நிறுத்திய மல்லிகார்ஜுன் கார்கே
‘நீரஜ் சேகர், பிரதமரான (சந்திரசேகர்) உங்கள் அப்பாவிற்கு இதே அவையில் நான் பாடம் எடுத்தவன், ஆகையால் அவையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று உன் அப்பாவிடம் சென்று நான் என்ன கற்றுகொடுத்தேன் என்று கேட்டுவிட்டுவா?’ என்று கூற, தலைகுனிந்த உட்கார்ந்த நீரஜ் சேகர் அவை முடியும் வரை அமைதியாவே அமர்ந்திருந்தார்.