அறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவு நாள்! நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

1 Min Read

சென்னை, பிப்.3 அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினை விடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், சி. வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மேலும் பங்கேற்று மரியாதை செலுத்தியோர்:

தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, வடசென்ைன மாவட்ட செயலாளர் சு. அன்புச்செல்வன், மயிலை சேதுராமன், கு. நா.ராமண்ணா, கோவீ. ராகவன், பூவை. தமிழ்செல்வன், உடுமலை வடிவேல், மயிலை அன்பு, மு. பவானி, ரா. அருள், மு.இரா. மாணிக்கம், மா. சந்தீப்குமார், மா. பூவரசன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா. பார்த்திபன், மரகதமணி, கொடுங்கையூர் தங்க. தனலட்சுமி, வெற்றி வீரன், தாம்பரம் மோகன்ராஜ், யுகேஷ், க.கலைமணி மற்றும் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *