பாட்னா, பிப்.3 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேபாளத்தைச் சேர்ந்த 9 பேர் கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு நேபாளத்திற்குப் புறப்பட்டனர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டம் மதுபானி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, அதேசாலையில் சிலர் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள்மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பய ணித்த நேபாளத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாய மடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர் ஆன்மீகப் பயணம் சென்ற 5 பக்தர்கள் பலி
Leave a Comment