ஆண்டவன் சக்தி என்பதெல்லாம் சுத்த புரூடாதானா?

Viduthalai
1 Min Read

கேள்வி: குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க எந்தக் கோயிலில் வழிபட வேண்டும்?

பதில்: திருச்சி திருவானைக்காலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசியுங்கள். இங்கு காலையில் அம்மன் மகாலட்சுமியாகவும், உச்சி காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறார். கல்வியில் சிறந்து விளங்க அம்மனுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுங்கள்.
கல்வி கற்க அப்போ மற்ற கோயில்களை வேண்டு
வதெல்லாம் சுத்த வேஸ்ட், அப்படித்தானே!



செய்தி: சீனா பரப்புவது நோய்க் கிருமி – பாகிஸ்தான் பரப்புவது பேய்க்கிருமி.

சிந்தனை: இந்தியா பரப்புவது மதவாதக் கிருமி என்று எடுத்துக் கொள்ளலாமா?



கேள்வி: திருப்பதி இலவச தரிசன கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானது குறித்து?

பதில்: இது போன்ற இடங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். சிறிய கவனமின்மையும் பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தும். நிதானமும், பொறுமையும் பக்தர்களுக்கு அவசியம். தள்ளுமுள்ளு, ஒருவரையொருவர் முந்துதல் போன்ற செயல்கள் பலரின் உயிருக்கு உலை வைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுதல் அவசியம்.

பதிலடி: கும்பமேளாவில் உயிரிழப்பு ஏற்படுவது – அவர்கள் நேரடியாக மோட்சம் போவதாகும் என்று சொல்லியிருக்கிறாரே ஒரு சாமியார் – அது திருப்பதிக்குப் பொருந்தாதா?
தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்பதெல்லாம் சுத்த புரூடா தானா?

(ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’
நாள்: 24.1.2025க்கான பதிலடிகள் இவை)

– கருஞ்சட்டை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *