புதுடில்லி, பிப்.1 டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பதவி விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
27 ஆண்டுகளாக…
டில்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஆம் ஆத்மி 27 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியாமல் போராடும் பாஜக, 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரியணை ஏறமுடியாத காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பதவி விலகல்!
இந்நிலையில் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பதவி விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பாவனா கவுர் – பாலம், நரேஷ் யாதவ் – மெஹ்ராலி, ராஜேஷ் ரிஷி – ஜனக்புரி, மதன் லால் – கஸ்தூர்பா நகர், ரோஹித் மெஹ்ராலியா,– திரிலோக்புரி, பி.எஸ்.ஜூன் பிஜ்வாசன், பவன் சர்மா, ஆதர்ஷ் நகர் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பதவி விலகியுள்ளனர்.