31.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட கூட்டு நாடாளுமன்ற குழுவின் காலத்தை நீட்டிக்க நிதிஷ் குமார் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் கோரிக்கை.
தி இந்து:
* காலிஸ்தானி ஆர்வலர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொலையில் விசாரணை ஆணையம் “வெளிநாட்டு தொடர்பு இல்லை” என்று கண்டறிந்ததாக கூறும் செய்தி அறிக்கையை கனடா நிராகரித்தது.
* உயர் நீதிமன்றங்களுக்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*90களுக்குப் பிறகு காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஓபிசி நம்பிக்கையை இழந்தது’, என்கிறார் ராகுல் காந்தி.
* யு.ஜி.சி. பல்கலைக்கழகங்களை சிறுமைப்படுத்துகிறது
* 2025 வரைவு விதிமுறை என்பது இலக்குகளை மாற்றும் மற்றொரு முயற்சியாகும் என்கிறார் மனோஜ் குமார் ஜா, எம்.பி.
* உ.பி. கும்ப மேளா கூட்ட நெரிசலில் உயிர் இழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளி யிடுங்கள், கும்ப மேளா ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்: எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை.
* வக்பு திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற குழு, மக்களவைத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பித்தது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பொருளாதாரம் ‘மந்த நிலையில்’ உள்ளது. ‘வேலைகள் இல்லை, பணவீக்கம் அதிகரித்து வருகிறது, ஊதியங்கள் தேக்கம் அடைகின்றன’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மோடி அரசுக்கு எச்சரிக்கை.
தி டெலிகிராப்:
* மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் புலனாய்வு பத்திரிகையின் இலாப நோக்கற்ற தகுதியை வருமான வரித்துறை நீக்கியுள்ளது, பத்திரிகை பொது நோக்கத்திற்கு உதவாது என்று காரணம் கூறப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உண்மையான இறப்பு எண்ணிக்கையை பெருமளவில் மூடிமறைத்ததாகக் குற்றம் சாட்டி இரண்டு சிறிய செய்தி அமைப்புகள் காட்சிப் பதிவுகளை வெளியிட்டன. இதற்கு எதிரான அரசின் நட வடிக்கை இது.
* கும்பமேளா நெரிசலில் உயிர் இழப்பு ஒரு வதந்தி என்று கூறிய உ.பி. முதலமைச்சர் யோகி ஒரு ‘பொய்யர்’, உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகாராட்டிராவில் ஆட்சியைப் பிடித்த பாஜக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மதிய உணவில் முட்டை மற்றும் சர்க்கரை நீக்கம் என அறிவிப்பு. மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.
* இந்தியாவில் வகுப்புவாத வன்முறை 2024 இல் 84 சதவீதம் அதிகரிப்பு. மகாராட்டிரா மாநிலம் முன்னிலை. உ.பி., குஜராத், உள்ளிட்ட மாநிலங்களில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு மாநிலம் இந்த பட்டியலில் இல்லை (அதனால் தான் இது பெரியார் மண்)
.- குடந்தை கருணா