மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது ஒன்றியஅரசு

2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 16– ஒன் றியஅரசு, தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு இந்த ஆண்டுக் கான தொகையாக மொத்தம் ரூ.7,532 கோடியை விடுவித் துள்ளது. அதன்படி தமிழ்நாட் டுக்கு ரூ.450 கோடி கிடைத்துள்ளது. 

மாநில பேரிடர் நிவாரண நிதி யின் (ஷிஞிஸிதி) கீழ் 22 மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த நிதியாண் டில் மாநிலங்களுக்கு வழங்கப் பட்ட தொகையின் பயன்பாட்டுச் சான்றிதழுக்கு காத்திருக்காமல், வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டு, மாநிலங்களுக்கு உடனடி உதவி யாகத் தொகை வெளியிடப்பட் டுள்ளது.

மக்கள் நீதிமன்ற பரிந்துரையின் படி ஆண்டு ஒன்றிய பங்களிப்பு இரண்டு சம தவணைகளில் வெளியிடப்படுகிறது. வழிகாட்டுதல் களின்படி, முந்தைய தவணையில் விடுவிக்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச் சான்றிதழைப் பெற்று, மாநில பேரிடர் நிவாரண நிதியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசிடமிருந்து அறிக்கை பெறப் பட்டதன் மூலம் நிதி விடுவிக்கப் படுகிறது. எவ்வாறாயினும், இம் முறை நிதியை விடுவிக்கும் போது, அவசரம் கருதி இந்த தேவைகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மழை, வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக் கிட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி இந்த தொகை வெளியிடப்பட்டுள்ளது.

 கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கு முறையே ரூ.180 கோடி மற்றும் ரூ.413 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராட்டிரா வுக்கு ரூ.1,420 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.812 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.707 கோடியும், பீகாரில் ரூ.624 கோடியும், குஜ ராத்தில் ரூ.584 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ரூபாயை அளித்தது ஒன்றிய அரசு. அதில் அதிகபட்சமாக மகாராட்டி ராவுக்கு ரூ.1,420 கோடி ஒதுக்கப் பட்டது.

 மாநில வாரியாக விடுவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகை விவரம் (கோடியில்)

தமிழ்நாடு -ரூ.450, தெலங்கானா – ரூ.188.80, ஆந்திரப் பிரதேசம் – ரூ.493.60 கோடி, அருணாச்சல பிரதேசம் ரூ.110.40, அசாம் - ரூ.340.40, பீகார் – ரூ.624.40, சத்தீஸ்கர் – ரூ.181.60, கோவா – ரூ.4.80, குஜராத் ரூ.584, அரியானா ரூ.216.80, இமாச்சலப் பிரதேசம் – ரூ.180.40, கருநாடகா – ரூ.348.80, கேரளா – ரூ.138.80, மகாராட்டிரா – ரூ.1420.80, மணிப்பூர் – ரூ.18.80, மேகாலயா – ரூ.27.20, மிசோரம் – ரூ.20.80, ஒடிசா – ரூ.707.60, பஞ்சாப் – ரூ.218.40, திரிபுரா – ரூ.30.40, உத்தரப்பிரதேசம் ரூ.812, உத்தரகாண்ட் – ரூ.413.20.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *