கடவுளின் கருணையோ கருணை கோவில் பிரசாதம் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம்!

1 Min Read

மும்பை, ஜன.27 மராட்டிய மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள மாஹூர் பகுதியில், பக்தர்கள் சிலர் ‘தாக்கூர் புவா’ பயணம் மேற்கொண்டி ருந்தனர். இந்தப் பயணத்தின்போது இவர்கள் கோவில் பிரசாதம் சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரசாதம் சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாஹுர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அனைவரின் உடல்நலமும் தேறி வருவதாகவும், விரைவில் அவர்கள் வீடு திரும்புவர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *