பிரச்சாரம் செய்ய ஆர்வம் இருந்தால் சிறு துகள், அணு, ஒரு மிளகு, கடுகு இருந்தால் கூட கொள்கையை வெளிப்படுத்தி விடலாம். அதற்கு பெரு நகரங்களில், வாய்ப்பு, வசதியோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. பழனி கழக மாவட்டத்தில் இருப்பது தான் “கோரிக்கடவு” எனும் சிறிய கிராமம். அங்கு இன்றைய நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (47) நடந்து வருகிறது. அங்குதான் ஒரு குடிநீர் பாட்டிலைக் கூட விட்டுவிடாமல் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்களின் படத்தை அச்சிட்டு, பயிற்சிப் பட்டறைத் தகவல்களையும் பதிவு செய்து அசத்தியுள்ளார்கள்! இதுதான் பகுத்தறிவின் கூர்மை! பாராட்டுகள் தோழர்களே!