25.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வக்ப் வாரிய மசோதா பற்றி விவாதிக்க அமைக் கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் இடை நீக்கம் எதிர் கருத்து தெரிவித்ததால் வெளியேற்றம்.
* நான் பிரதமரிடத்திலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடத்திலும் இங்கிருந்து ஒரு வேண்டு கோள் வைக்கிறேன். தயவு செய்து நீங்கள் ஆளுநரை மாற்றவே மாற்றாதீர்கள். அவரே இருக்கட்டும். தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பேசிக் கொண்டே இருப்பதால், திமுக இன்னும் வளர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிரா அரசின் 19 பாஜக அமைச்சர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கி உதவியாளர்களாக நியமனம். தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கும் சங்பரிவாருக்கும் இடையே பாலமாக செயல்பட பாஜகவின் மூத்த தலைவர் சுதிர் தேல்கோன்கர் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* “ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதோடு, பிரதமரின் கண்ணியமும் அவரது அலுவலகத்தின் கருணையும் வீழ்ச்சியடைகிறது என்று மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது பேசினார். தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 87க்கு வீழ்ந்துள்ளது. விரைவில் சதம் (100) அடிப்பார் போல் தெரிகிறது என காங். கட்சி விமர்சனம்
தி டெலிகிராப்:
* ஜம்மு-காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் சின் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் நடந்த மூவர்ண கொடி பேரணியில் கலந்து கொள்வதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தியதற்கு மக்கள் ஜனநாயக கட்சி கண்டனம்
.- குடந்தை கருணா