மெட்ரோ – மின்சார ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக பொலிவுறும் பிராட்வே பேருந்து நிலையம்

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.24 சென்னையில் பழமை யான பேருந்து நிலைய மாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் 500-க்கும் மேற் பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

ஒருங்கிணைந்த முனையம்

இதற்கிடையே, பேருந்து நிலையம், மின்சார ரயில், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களோடு ஒருங் கிணைந்த முனையமாக பிராட்வே பேருந்து நிலை யம் மாற்றப்பட உள்ளது. இதற்காக, ஒப்பந்தத்தில் சிறிய மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகள் கூறியதாவது: பிராட்வேயில் தற்போ துள்ள பேருந்து நிலை யம் ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது. 4.42 ஏக்கர் பரப்பளவில் 10 மாடியில் ஒரு வணிக வளாகமும், பேருந்து நிலையத்துடன் கூடிய 8 மாடியில் ஒரு கட்டடமும் அமைக்கப்பட உள்ளது.

நகரும் படிக்கட்டுகள்

அருகில் உள்ள மின் சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலை யம், பறக்கும் ரயில் நிலையத்தையும் இங் கிருந்து இணைக்கும் வகையில் வசதிகள் ஏற் படுத்தப்படும். பயணிகள் வந்து செல்ல வசதியாக, நகரும் படிக்கட்டுகள், ஸ்கைவாக், உணவகங்கள், பொழுதுபோக்கு அம் சங்கள் இருக்கும்.
ரூ.650 கோடியில் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ள கடந்த வாரம் ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்து, அடுத்த 3 மாதங்களில் பணிகளைத் தொடங்கி, வரும் 2028-க்குள் அனைத்து பணி களையும் முடிக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது. இவ் வாறு அவர்கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *