ஜி.எஸ்.எல்.வி. மார்க் 2 ராக்கெட் வரும் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

Viduthalai
1 Min Read

சிறீஹரிகோட்டா, ஜன. 24- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற் கைக்கோளை, வரும் 29ஆம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது.
ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டில் இஸ்ரோ ஏவும் 3ஆவது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு திட்ட மிட்டப்படி, கூடுதலாக, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்து உள்ள ஆதித்யா-எல்-1அய் நடப்பாண்டு 3ஆவது காலாண்டிலும் மற்றும் மனிதனை விண் ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக் கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதி யில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை, வருகிற 2025ஆம் ஆண்டிற்கான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இலக்கை எட்ட இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *