அம்மன் சக்தி அவ்ளோ தானா?

Viduthalai
1 Min Read

சமயபுரம் கோவிலுக்கு நடைபயணமாகச் சென்ற பக்தர் உயிரிழப்பு!
பெரம்பலூர், ஜன.24 சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் நடைபயணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இரூர் அருகே…
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட் பட்ட ஓலைப்பாடி கிராமம் நடுத்தெருவில் வசித்து வரும் கொளஞ்சி (வயது 57), இவருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து நடை பயணமாக 9 பேருடன் சமயபுரம் சென்று கொண்டி ருந்த நிலையில், நேற்றிரவு (23.01.2025) சுமார் 9.30 மணியளவில், சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலை இரூர் அருகே பின்பக்கமாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், கொளஞ்சி என்பவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் வழக்குப் பதிவு
அதனைத் தொடர்ந்து உடன் சென்ற உறவி னர்களான பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து விபத்துக்குள்ளானவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பாடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *