சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடக்கிறது

viduthalai
2 Min Read

சென்னை, ஜன.23 சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:

சென்னை மாவட்ட ஆட்சி யா் அலுவலக வளாகத்தின் தரைத் தளத்தில் வரும் 29–ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரமின்றி பணமோசடி வழக்கு

அமலாக்கத் துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்
மும்பை, ஜன.23 உண்மைத்தன்மையை அறியாமல் புகாரை விசாரணைக்கேற்ற அமலாக்கத் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

மகாராட்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் குல் அச்ரா. இவர் சொத்துச் சந்தை தொழிலதிபரான ராகேஷ் ஜெயின்மீது பண மோசடி, ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த விசாரணைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகேஷ் ஜெயின் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ராகேஷ் ஜெயின்மீது தவறாகப் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி, அமலாக்கத் துறையிடம் அவர்மீது பொய்ப் புகார் அளித்த குல் அச்ராவுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. மேலும், புகாரின் உண்மைத்தன்மையை அறியாமல் அதை விசாரணைக்கேற்ற அமலாக்கத் துறைக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தீர்ப்பின்போது, “அமலாக்கத்துறை போன்ற ஓன்றியஅரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்து கொள்ள வேண்டும்,” என்று நீதிபதி கூறினார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *