இன்று ‘தமிழ்நாடு நாள்’ விழா மாவட்டங்கள் எங்கும் கொண்டாட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,ஜூலை18 – ”தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு இன்று (18.7.2023) அனைத்து மாவட்டங் களிலும் பேரணி மற்றும் ஒளிப்படக் கண்காட்சி நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம் நாள் கொண்டாடப் படுகிறது. கடந்த ஆண்டு (2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயி லாக முதலமைச்சர் கலந்துகொண்டார். விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் ஜூலை 18ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் “தமிழ்நாடு நாள்” குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவி யர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.

அதேபோன்று “தமிழ்நாடு நாள்” முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பு ஒளிப் படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு ஒளிப்படக் கண்காட்சி நடைபெறும். அமைச் சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *