கொல்கத்தா,ஜன.21- மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கூறுகையில், “கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி சி.பி.அய். வசம் தரப்பட்டது.நாங்களே விசாரணை செய்து இருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை உறுதி செய்து இருப்போம்.விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை.ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று கூறினார்.