போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்து திருச்சியில் இருந்து மதுரை வரை வைகோ நடை பயணம் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறார்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, நவ. 8- போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன. 2ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராக நவ.11இல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பெருமளவில் பங்கேற்கும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருளுக்கு எதிராக ஜன.2ஆம் தேதி திருச்சியில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு மணப்பாறை, திண்டுக்கல் வழியாக ஜன.12ஆம் தேதி மதுரையை அடைந்து எங்களது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *