புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஜன.18 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது கருத்து களைத் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடை முறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக ஒன்றியஅரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்தது. கடந்த ஜூலை 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.
இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சத்திய நாராயணன், தலை மையிலான ஒரு நபர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;

பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (ஒன்றிய சட்டம் 45/2023), பாரதிய நகரிக் சுரக்ஷா சன் ஹிதா, 2023 (ஒன்றிய சட்டம் 46/2023), மற்றும் பாரதிய சாக்ஷ்யா அதிநியம், 2023 (ஒன்றிய சட்டம் 47/2023) ஆகிய புதிய குற்றவியல் சட்டங்களை ஆய்வுசெய்து அதன் பரிந்துரைகளை மாநில அரசுக்கு சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவானது மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு தனது பரிந் துரையை அரசுக்கு சமர்ப் பிக்கும்போது, அனைத்து தரப்பினர்களையும் கலந்தா லோசிக்க வேண்டும். எனவே, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் இணைய தளம் மூலம் மாநில திருத் தங்கள் தொடர்பான தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க கோரி அழைப்பு விடுக்க இக்குழு முடிவு செய்துள்ளது.

ஆலோசனைகள்

இந்த 3 குற்றவியல் சட் டங்கள் குறித்து, கருத்துக்கள் அல்லது ஆலோசனைகளை குழுவின் குறிப்பிட்ட வரம் புகளுக்குட்பட்டு சமர்ப்பிக்க விரும்பும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஆங்கிலம் அல்லது தமிழில் https://www.omc-crl-laws2024.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோ சனைகளை தெரிவிக்க கோரப்படுகிறது என்று இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.

அவ்வாறு இணையதளத் தில், தங்கள் ஆலோசனையின் மீது விரிவான முறையீட்டு மனுவினை சமர்ப்பிக்க விரும்பினால் கருவி உதவிக் குறிப்பில் (Tool Tip) குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்பை (Format) கடைப்பிடிக்க வேண்டும்; இல்லையெனில், அம்மனு பரிசீலிக்கப்படாமல் நிராகரிக் கப்படும் எனத் தெரி விக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *