திருச்சி, ஜன.16 திருச்சி கழக மாவட்டத்தின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் டிச.29 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள ஓய்வு கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார். இதில் கலந்து கொண்ட அத்தனை மகளிரும் தங்கள் தங்கள் குடும்ப அனுபவங்களையும் தங்கள் இயக்க அனுபவங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொண்டனர்.
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு அளித்துள்ள இயக்கப் பணிகள் குறித்தும், அனைத்து பகுதிகளிலும் கலந்துரையாடல் கூட்டங்களை இல்லங்களிலே நடத்த வேண்டும். கிராமப்புறங்களிலும் நடத்த வேண்டும், தெருமுனை கூட்டங்களை மகளிர் பொறுப்பாளர்களே பொறுப்பேற்று நடத்த வேண்டும். மேலும் தமிழர் தலை வரின் அறிவுறுத்தலுக்கிணங்க மகளிர் தோழர்கள் ‘பெரியார் பிஞ்சு‘ சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறினர்.
மாவட்ட மகளிர் தோழியர் ரூபியா, பெரியார் பிஞ்சு இதழ் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல பத்திரிக்கை என்றும், பெரியார் பிஞ்சுகளுக்காக தனி யாக தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி நம் இல்லங்களில் உள்ள பெரியார் பிஞ்சு களுக்கான ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சியை, “பெரியார் பிஞ்சுகளுடன் ஒரு நாள்” என்று தலைப்பிட்டு ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்துவதாக திருச்சி மகளிர் தோழர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
தோழியர்கள் சங்கீதா, சாந்தி ஆகியோர் திருச்சி கழக மாவட்டம் என்பது மகளிரை பொருத்தவரையில் ஒரு குடும்பம் போல ,“எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் மகளிர் தோழர்கள் ஒற்றுமையாக செயல்படு கின்றோம் என்று கூறினர்.
புதிய மகளிர் தோழியர்கள் புனிதா, பிரியா ஆகியோர் தாங்கள் இயக்கத்தில் இணைந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மகளிர் பாசறை மாநில செயலாளர்
பா.மணியம்மை தன்னுடைய வாழ்வி ணையர் தன்னுடைய இயக்க வாழ்க்கைக்கு மிகுந்த உறுதுணையாக இருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார். இக்கலந்து ரையாடல் கூட்டத்தில் தோழியர்கள் புனிதா, சாந்தி, மகளிரணி செயலாளர் ரூபியா, திருவெறும்பூர் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் சங்கீதா, மகளிர் பாசறை செயலாளர் பிரியா, மாவட்ட மகளிரணி தலைவர் அம்பிகா, பெரியார் பிஞ்சுகள் தமிழ்க்கவி, அன்பு, லதா, கயல், தமிழ்அழகன், திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், ஆல்பர்ட், காட்டூர் சங்கலிமுத்து, கதிர்வேல், கிரேசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
திருச்சி கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக, திராவிட நூற்றாண்டு விழாக்களை ஒட்டி, அடுத்த தலைமுறையினராம் பெரியார் பிஞ்சுகளை கொள்கைப்படுத்தும் வித மாக, ‘‘பெரியார் பிஞ்சுகளுடன் ஒரு நாள்’’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளை மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அறிவிப்பினை ஒட்டி“வைக்கம் நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டங்கள் நடத்து வது, மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பா ளர்களுக்கு தமிழர் தலைவரால் அறி விக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, முதல் தவணையாக 10 பெரியார் பிஞ்சு சந்தாக்களை அளிப்பது, மாவட்ட கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பா ளர்களை நியமிப்பது, தமிழர் தலைவரால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள 100 பொதுக் கூட்டங்களில் மகளிர் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக தோழர் புனிதா நன்றி கூறினார்.