கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.1.2025

Viduthalai
2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு. திரும்பப் பெற வலியுறுத்தல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ராமர் கோயில் கட்டிய பிறகே உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிற ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு தேச துரோகம்: காங். தலைமையகம் திறப்பு விழாவில் ராகுல் ஆவேசம்; இந்திய அரசமைப்புக்கு எதிராக போராடுவதாக பரபரப்பு பேச்சு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆர்.எஸ்.எஸ். தலைவரின் சுதந்திர பேச்சுக்கு, இதுபோன்ற அறிக்கைகளை அவர் தொடர்ந்து வெளியிட்டால் நாட்டில் நடமாடுவது கடினமாகி விடும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும், ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி பராஸ் பீகார் மகா கூட்டணியில் சேர லாலு ஆதரவு.

* யுஜிசியின் புதிய விதிமுறைகளை எதிர்த்து போராட கேரள அரசு மற்ற மாநிலங்களை அணிதிரட்ட முடிவு.

தி இந்து:

* 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்ட திருத்தம், குடிமக்களின் தேர்தல் தொடர்பான பதிவுகளை அணுகும் உரிமையை கட்டுப்படுத்துவதற்கு சமமானது என்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் (EC) பதில்களைக் கோரியது.

* ஒன்றிய ரயில்வே அமைச்சர் பல்டி: மதுரை தூத்துக்குடி இடையே ரயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால் கைவிடப்பட்டதாக” கூறிய நிலையில், தற்போது, மதுரை-தூத்துக்குடி புதிய பாதைத் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை என விளக்கம்.

* ‘கருநாடக மேனாள் முதலமைச்சர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது’, கர்நாடகா உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

* விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் சாகும் வரையிலான பட்டினிப் போராட்டம் 51ஆவது நாளை எட்டிய நிலையில், பஞ்சாபின் கனௌரியில் தங்கள் கோரிக்கைகளை ஆதரிக்க 111 விவசாயிகள் கொண்ட குழு காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியது.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *