பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் வைக்கம் நூற்றாண்டு வெற்றி முழக்க பரப்புரை கூட்டம்

Viduthalai
3 Min Read

பட்டுக்கோட்டை, ஜன. 16- பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் 02.01.2025 வியாழன் அன்று மாலை 6 மணி அளவில் மந்திரமல்ல? தந்திரமே! என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை சோம.நீலகண்டன் நடத்தி காட்டி அனைத்தும் மந்திரம் அல்ல தந்திரமே என்பதற்கான விளக்கத்தினை அளித்தார்.

தொடர்ந்து திராவிடர் கழக பட்டுக்கோட்டை கழக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.அரவிந்த் குமார் வரவேற்புரையாற்றினார்

திராவிடர் கழக நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர் தலைமை ஏற்றிட திராவிடர் கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா.காமராஜ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்ல தம்பி, மாவட்ட கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் அ.அண்ணாதுரை, மாவட்ட கழக தொழிலாளர் அணி தலைவர் முத்து துரைராஜ், ஒன்றிய திராவிடர் கழக தலைவர் இரெ.வீரமணி, ஆகியோர் முன்னிலை ஏற்றிட கழக சொற்பொழிவாளர் சில்லத்தூர் வீர.சிற்றரசு வைக்கம் நூற்றாண்டு கால நிகழ்வு குறித்தும், நமக்காக உழைக்கும் சமூக நீதிக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் செயல்பாடு நாம் பெற்றிருக்கிற பயன்களை விளக்கி உரையாற்றி ஆசிரியர் வீரமணி தலைமை ஏற்றிட இளைஞர்களே வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து கழக சொற்பொழி வாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி வைக்கம் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாடிய கேரளா அரசினையும் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடிய திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவி பலாத்கார சம்பவத்தை சுட்டிக்காட்டி அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆன ஆளுநர் அண்ணா பல்கலைக்கழக த்தில் துணைவேந்தரை நியமிக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்றும் இதற்காக தமிழ்நாட்டில் ஒருவர் சாட்டையால் அடித்துக் கொள்கிறார் அப்பொழுது துணைவேந்தர் நியமனம் செய்யாமல் இரண்டு ஆண்டாக இருந்து வரும் ஆளுநருக்காக யார் சாட்டையால் அடித்துக் கொள்வது என்றும் பாலியல் கட்சி பாஜக இது குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது எனவும் எட்டு வயது சிறுமி என்றும் பாராமல் காஷ்மீரில் கோவிலுக்குள் வைத்து ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பன போன்ற பல்வேறு பாஜக கட்சியினரின் பாலியல் சீண்டல்களை அம்பலப்படுத்தி அறிவார்ந்த வினாவை பொதுமக்கள் மத்தியில் எழுப்பிய போது மக்கள் பேச்சு நியாயத்தை உணர்ந்து ஆர்வமுடன் செவி மடுத்தனர்.

கூட்டத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் மாணிக்க சந்திரன், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் புலவஞ்சி பெ.அண்ணாதுரை, சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் சி.ஜெகநாதன், சேது பாவாசத்திரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.சண்முகவேல், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் கனக.இராமச்சந்திரன், பேராவூரணி நகர திராவிடர் கழக தலைவர் சி.சந்திரமோகன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மன்னங்காடு ம.சிவஞானம், பட்டுக்கோட்டை நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆசிரியர் ம,வள்ளுவப்பெரியார், மண்டலகோட்டை சரவணன், கழக ஆர்வலர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி நன்றி கூறினார்.

பரப்புரை கூட்டத்தை ஒட்டி பட்டுக்கோட்டை நகர் முழுவதும் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வைத்து விளம்பரம் செய்யப்பட்டது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *