மாபெரும் அறிவியல் கண்காட்சி 2025

Viduthalai
3 Min Read

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில்

தஞ்சை, ஜன.13- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளான நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 11.01.2025 அன்று காலை 10.00 மணியளவில் துவங்கியது.

இக்கண்காட்சியை தஞ்சாவூர் அம்மன்பேட்டையிலுள்ள அருள்நெறி உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.விஜயகுமார் மற்றும் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியர் முனைவர் பழ.பிரகதீசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் தி.விஜயலெட்சுமி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

புதிய அறிவியல் சிந்தனையை உருவாக்குவதில் மாணவர்கள் எந்த அளவிற்கு தங்களை பொறுப்புடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர்களால் உருவாக்கப்பட்ட திட்ட செயல்முறை படைப்புகள் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். துறை வாரியாக மாணவர்களின் திட்ட செயல்முறை படைப்புகளை பார்வையிட்ட பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வல்லுநர் குழு (Expert Committee) சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட படைப்புகளை (Projects) பரிசுக்காக தேர்ந்தெடுத்தனர்.

துறைவாரியாக முதல் இடம் பெற்ற மாணவர்கள்
கட்டட எழிற்கலை (Architectural Assistantship(SW) துறையில் ஜீ.காளிதாஸ், எம்.ரேஸ்மா,
எஸ்.முகேஷ்கண்ணன் ஆகியோர் கொண்ட மாணவர் குழு “Wall Mural using Scrap Materials” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்.

மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் (ECE) துறையில் “IOT Based Women Safety System” என்ற செயல்முறை படைப்பிற்காக எஸ்.தனிஷா, ஜே.ஹாரிஸ், பி.ரதிக் ரஜா, ஏ.பாலகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு முதலிடம் பெற்றது.

மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் (MOP) துறையில் ஜீ.துஃபைல் அகமது,
எம்.சீரஞ்சன், எஸ்.சுவாதி ஆகியோரைக் கொண்ட “Environmental Pollution” குழு என்ற செயல்முறை திட்டத்திற்கு முதல் பரிசியை பெற்றனர்.

அமைப்பியல் (Civil) துறையில் வீ.யோகேஸ்வரன், கே.சுதர்சன், ஏ.முபாரக், ஜே.கெவின் ஜோயல் ஆகியோரைக் கொண்ட குழு “Construction Process” என்ற செயல்முறை திட்டத்திற்கு முதல் பரிசினை பெற்றனர்.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் (EEE) எம்.மாதேஷ், எஸ்.நந்தனன், டி.நவீன் பிரசாத், பி.ராஜு,
ஆர்.தொல்காப்பியன், கே.வெங்கட்ராம் ஆகியோரைக் கொண்ட குழு “Drainage Water Based Power Production” என்ற திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.

கணினித் துறையில்(CT)
எஸ்.கீர்த்திவாசன், எம்.அகரன் ஆகியோரைக் கொண்ட குழு என்ற “Water Tank Alert System” திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.

இயந்திரவியல் (Mechanical) துறையில் எஸ்.வி.யோகேஸ்,
எஸ்.சஞ்சை, எம்.தமிழ்மணி,
ஆர்.மதன், ஆர்.விஜயமணிகண்டன் ஆகிய மாணவர்கள் “Broom Stick Machine” என்ற திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.

முதலாம் ஆண்டு (I Year)
எஸ்.ஹரிவர்சன், எஸ்.பிரதீப், கே.ராகுல், எஸ்.சச்சின் என்ற மாணவர்கள் என்ற “Mini Dronet” திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.

இக்கண்காட்சியை இக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் அறிவியல் பூர்வமாக தங்களது (Project) திட்ட செயல்முறை படைப்புகளை உருவாக்கிய அனைத்து மாணவ, மாணவிகளையும் இக்கல்லூரி முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும் பாராட்டினார்கள். மேலும் எதிர்காலத்தில் சிறந்த பொறியாளர்களாகவும், பல்துறை வல்லுநர்களாகவும் தங்களை திறம்பட நிலைநாட்டிக் கொள்ள வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இக்கண்காட்சியினை இந்திய பொறியாளர் கூட்டமைப்பு (IE(I)) ஒருங்கிணைப்பாளர்; பேராசிரியர் க.ரோஜாவும் மற்றும் இயந்திரவியல் துறை பேராசிரியர் தா.ராஜ்குமாரும் ஒருங்கிணைத்தாரகள.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *