ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் ஹிந்து மதக் கோயில்களைத் திறந்து வைக்கக் கூடாது என்று சங்கராச்சாரியிலிருந்து, சங்கிகள் வரை ‘சவுண்டு’ விடுகிறார்கள்.
எந்த நேரத்தில் நடை திறப்பு – மூடுதல் என்பதற்கெல்லாம் அய்திகம் உண்டு என்று பேசுவதற்கெல்லாம் குறைச்சல் இல்லை.
அவாளுக்கென்றால் ஒரு சட்டம், (பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது).
ஆனால் நடப்பது என்ன? ஆங்கிலப் புத்தாண்டில் விடிய விடிய திறந்து வைக்கப்படாத கோயில்களே கிடையாது. காரணம் வருவாய் – தட்சணை அர்ச்சகப் பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டப்படுகிறதே!
எடுத்துக்காட்டுக்கு இதோ சில கோயில்கள்.
பூரி ஜெகநாதர் கோயில்
திருத்தணி கோயில்
திருப்பதி கோயில்
வடபழனி கோயில்