மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வில் ஓரவஞ்சனை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.31 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கோ ரூ.7 ஆயிரம் கோடி

புதுடில்லி, ஜன.12 வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒன்றிய அரசு விடுவித் துள்ளது. அதன்படி அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.31,039.84 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடியும் விடுவிக் கப்பட்டுள்ளது.

வரிப்பகர்வு தொகை

ஒன்றிய அரசு சார்பில் வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மூலதனச் செலவினங்களை விரைவாக மேற்கொள்ளவும், வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிடவும் மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ரூ.1,73,030 கோடி வரிப் பகிர்வாக வழங்கப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ89,086 கோடியாக இருந்த இந்த வரிப்பகிர்வு என்பது இந்த மாதம் ரூ.1,73,030 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டுள்ள நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3,1039.84, ராஜஸ் தான் மாநிலத்துக்கு ரூ.1,0426.78 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.13582.86 கோடி, மகாராட்டிராவுக்கு ரூ.10,930.31 கோடி, பீகாருக்கு ரூ.17,403.36 கோடி, என அள்ளிக் கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.7057.89 கோடி, தெலங்கானாவுக்கு ரூ. 3637.09 கோடி, கருநாடகாவுக்கு ரூ.6310.40 கோடி, கேரளாவுக்கு ரூ.3330.83 கோடி, பஞ்சாப்புக்கு ரூ. 3126.65 என ஓரவஞ்சகத்துடன் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதர மாநிலங்களுக்கு

ஆந்திர பிரதேசத்துக்கு ரூ.7,002.52 கோடி, அருணாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.3,040.14 கோடி, அசாமுக்கு ரூ.5,412.38 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ.5,895.13 கோடி, கோவாவிற்கு ரூ.667.91 கோடி, குஜராத்துக்கு ரூ. 6,017.99 கோடி, அரியானாவுக்கு ரூ.1,891.22 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.1436.16 கோடி, ஜார்கண்ட்டுக்கு ரூ.5,722.10 கோடி வரிப் பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது.

மணிப்பூருக்கு ரூ. 1238.90 கோடி, மேகலா யாவுக்கு ரூ. 1327.13 கோடி, மிசோராமுக்கு ரூ.865.15 கோடி, நாகலாந்துக்கு ரூ. 984.54, ஒடிசாவுக்கு ரூ.7834.80 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிக்கிமிற்கு ரூ.671.35 கோடி, திரிபுராவுக்கு ரூ.1225.04, கோடி, உத்தராகண்ட்டுக்கு ரூ.1934.47 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13017.06 கோடி என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *