உயிரிழந்த 6 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிதி

viduthalai
1 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று (10.01.2025) சென்னை, தேனாம்பேட்டை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து பணியிலிருக்கும்போது உயிரிழந்த 6 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்சுப்ரியா சாகு, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் இயக்குநர் மரு.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.ராஜமூர்த்தி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர்பூபேஷ் சுஷில் ராகுல் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மருத்துவப் பேராசிரியர்கள், உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *