சட்டப் பேரவையை திட்டமிட்டே ஆளுநர் அவமதித்து வருகிறார் தலைவர்கள் கண்டனம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜன.7 சட்டப்பேரவையை திட்டமிட்டே ஆளுநர் ஆர்.என்.ரவி அவ மதித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டிய ஆளுநர், நாட்டுப் பண்ணைப் பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து நிறைவேற்றி காட்டியிருக்கிறார். சட்டப்பேரவையை அவமதித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் கண்டனத்துக்குரியது. அரசியல் கட்சி பிரதிநிதிபோல ஆர்.என்.ரவி செயல்படுவது அவர் வகித்து வரும் அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றதல்ல.

தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து அரசின் கொள்கையை எடுத்துக்கூறும் உரையை ஆளுநர் வாசிப்பது வழக்கமான நடைமுறை. இதை தமிழ்நாடு ஆளுநர் மூன்றாவது முறையாக நிராகரித்து பேரவையில் இருந்து வெளியேறி உள்ளார். இது தமிழ்நாட்டில் நிலவிவரும் அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: சட்டப் பூர்வமான கடமையை நிறைவேற்றாமல் இன் றைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய் திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மரபு களை மதிக்காமலும், ஆளுநருக்கு உள்ள கடமைகளை நிறை வேற்றாமலும் ஒன்றிய பாஜக அரசு விரும்பு கிறபடி நடந்து கொள்வதை ஆளுநர் வழக்க மாகக் கொண்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.

தமிழ்நாடு

த.வா.க தலைவர் தி.வேல்முருகன்: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் புதிய சட்டத்தையும், மரபுகளையும் உருவாக்க முயற்சி செய்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் ஆளுநர் உரை தொடங்கும். அதைத்தொடர்ந்து நிறைவாக நாட்டுப் பண் பாடப்படும். இதுதான் வரலாறு. அதனால் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தது நாட்டுப் பண் பாடப்பட வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *