உச்சநீதிமன்றத்தின் அரிய வகை தீர்ப்பு

Viduthalai
2 Min Read

வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் பெற்றோர் வழங்கிய சொத்துக்களின்
தான பத்திரத்தை ரத்து செய்யலாம்!

புதுடில்லி, ஜன. 5 “வயதான காலத்​தில் பிள்​ளைகள்கவனிக்​கா​விட்​டால், பெற்​றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்​ய​லாம்” என்று உச்சநீதி​மன்ற நீதிப​திகள் தீர்ப்​பளித்துள்ளனர்.

வழக்கு தள்ளுபடி
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்க​வில்லை. இதையடுத்து, மகனுக்கு வழங்கய சொத்தை மீட்டுத் தர வேண்​டும். அந்த சொத்து​களுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்​டும் ன்று கோரி ம.பி. உயர் நீதி​மன்​றத்​தில் அந்த பெண் வழக்கு தொடுத்​தார். அதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், “வயதான பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்க​வில்லை என்ற காரணத்​துக்காக தான பத்திரத்தை (தான செட்​டில்​மென்ட்) ரத்து செய்ய முடி​யாது. மேலும், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால், தானப் பத்திரம் செல்​லாது என்று எந்த நிபந்​தனையை​யும் மனுதாரர் விதிக்க​வில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடி​யாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்​தது.
இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் சி.டி.ரவிக்​கு​மார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்​வில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிப​திகள் நேற்று (4.1.2025) அளித்த தீர்ப்​பில் கூறிய​தாவது:

மிகவும் கவலை அளிக்​கிறது
ம.பி. உயர்நீதிமன்றம் சட்டத்​தின்படி மட்டுமே ஆய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், மூத்த குடிமக்​களின் உணர்​வு​களைப் பாது​காக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்​காமல் போவது மிகவும் கவலை அளிக்​கிறது. அப்படிப்​பட்ட சூழ்​நிலை​யில், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால் “பெற்​றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்​தின்​”படி பிள்​ளை​களுக்கு பெற்​றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்​ய​லாம். அந்த தான பத்திரத்தை செல்​லாது என்று அறிவிக்​கலாம்.

தேவையான அடிப்படை வசதி​கள்!
இந்தச் சட்டம் மூத்த குடிமக்​களுக்கு உதவி செய்வதற்காக உள்ளது. எனவே, கூட்டுக் குடும்பத்​தில் இருந்து ஒதுக்​கப்​படும் மூத்த குடிமக்கள் விஷயத்​தில் சட்டத்தை கடுமையாக செயல்​படுத்த வேண்​டும் என்பதை​விட, அதில் தளர்​வுகள் காட்டி சட்டத்​துக்கு விளக்கம் அளிக்க வேண்​டும். சொத்துகளை எழுதி வைத்​தவருக்கு தேவையான அடிப்படை வசதி​கள், உடல்​ரீ​தியான தேவைகளை சொத்துகளை பெற்​றவர் செய்ய வேண்​டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி ​கொடுத்தது செல்​லாது என்று அறிவிக்க ​முடி​யும்.
இவ்​வாறு உச்சநீ​தி​மன்ற நீ​திப​தி​கள்​ தீர்​ப்​பளித்​தனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *