உச்சநீதிமன்றத்தின் அரிய வகை தீர்ப்பு

2 Min Read

வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் பெற்றோர் வழங்கிய சொத்துக்களின்
தான பத்திரத்தை ரத்து செய்யலாம்!

புதுடில்லி, ஜன. 5 “வயதான காலத்​தில் பிள்​ளைகள்கவனிக்​கா​விட்​டால், பெற்​றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்​ய​லாம்” என்று உச்சநீதி​மன்ற நீதிப​திகள் தீர்ப்​பளித்துள்ளனர்.

வழக்கு தள்ளுபடி
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்க​வில்லை. இதையடுத்து, மகனுக்கு வழங்கய சொத்தை மீட்டுத் தர வேண்​டும். அந்த சொத்து​களுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்​டும் ன்று கோரி ம.பி. உயர் நீதி​மன்​றத்​தில் அந்த பெண் வழக்கு தொடுத்​தார். அதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், “வயதான பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்க​வில்லை என்ற காரணத்​துக்காக தான பத்திரத்தை (தான செட்​டில்​மென்ட்) ரத்து செய்ய முடி​யாது. மேலும், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால், தானப் பத்திரம் செல்​லாது என்று எந்த நிபந்​தனையை​யும் மனுதாரர் விதிக்க​வில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடி​யாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்​தது.
இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் சி.டி.ரவிக்​கு​மார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்​வில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிப​திகள் நேற்று (4.1.2025) அளித்த தீர்ப்​பில் கூறிய​தாவது:

மிகவும் கவலை அளிக்​கிறது
ம.பி. உயர்நீதிமன்றம் சட்டத்​தின்படி மட்டுமே ஆய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், மூத்த குடிமக்​களின் உணர்​வு​களைப் பாது​காக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்​காமல் போவது மிகவும் கவலை அளிக்​கிறது. அப்படிப்​பட்ட சூழ்​நிலை​யில், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால் “பெற்​றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்​தின்​”படி பிள்​ளை​களுக்கு பெற்​றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்​ய​லாம். அந்த தான பத்திரத்தை செல்​லாது என்று அறிவிக்​கலாம்.

தேவையான அடிப்படை வசதி​கள்!
இந்தச் சட்டம் மூத்த குடிமக்​களுக்கு உதவி செய்வதற்காக உள்ளது. எனவே, கூட்டுக் குடும்பத்​தில் இருந்து ஒதுக்​கப்​படும் மூத்த குடிமக்கள் விஷயத்​தில் சட்டத்தை கடுமையாக செயல்​படுத்த வேண்​டும் என்பதை​விட, அதில் தளர்​வுகள் காட்டி சட்டத்​துக்கு விளக்கம் அளிக்க வேண்​டும். சொத்துகளை எழுதி வைத்​தவருக்கு தேவையான அடிப்படை வசதி​கள், உடல்​ரீ​தியான தேவைகளை சொத்துகளை பெற்​றவர் செய்ய வேண்​டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி ​கொடுத்தது செல்​லாது என்று அறிவிக்க ​முடி​யும்.
இவ்​வாறு உச்சநீ​தி​மன்ற நீ​திப​தி​கள்​ தீர்​ப்​பளித்​தனர்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *