ராகுல் காந்தி கடும் தாக்கு
புதுடில்லி, ஜன.4 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதி வில் கூறியிருப்பதாவது;-
வினாத்தாள் கசிவு
“பா.ஜ.க. ஏகலைவனைக்கு ஏற்பட்டதை போல் இந்திய இளைஞர்களின் கட்டை விரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது.
அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்பட்டாலும் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை. தேர்வுகள் நடத்தப்பட்டால், வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன. இளைஞர்கள் நீதி கோரும்போது, அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது.
முதலமைச்சர் உறுதியளித்த பிறகும்…
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் சமீபத்திய போராட்டங்க ளுக்குப் பிறகு, மத்திய பிர தேசத்தில் அரசு தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதி ராக போராடிய இரண்டு மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுவும் முதலமைச்சரே அந்த மாணவர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த பிறகும் இது நடந்துள்ளது.
அனுமதிக்க மாட்டோம்
பா.ஜ.க. அரசு மாணவர்களின் நம்பிக்கையை உடைத்து, ஜனநாயக அமைப்பை முடக்கிவிட்டது. மாணவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். எந்த நிலையிலும் இளைஞர்களின் குரலை பா.ஜ.க. நசுக்க அனு மதிக்கமாட்டோம்.’’
இவ்வாறு ராகுல் காந்தி தெரி வித்துள்ளார்.