கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிய குழந்தைகளை மிரட்டிய குஜராத் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குழந்தைகள் என்ன தவறு செய்தனர்?
குஜராத் மாநிலம் பாபுநகரில் (காந்தியின் பெயரில் உள்ள நகர்) உள்ள தனியார் பள்ளி ஒன்றில், குழந்தைகளோடு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்
அப்போது உள்ளே நுழைந்த விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர், சாண்டா தாத்தா தொப்பி அணிந்த குழந்தைகளிடமிருந்து அந்தத் தொப்பிகளைப் பிடுங்கி வீசினர்; கிறிஸ்துமஸ் விழாவிற்காக அலங்கரிக்கப்பட்ட அலங்கார விளக்குகளை உடைத்து எறிந்தனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களை மிரட்டி, ‘‘நீங்கள் ஹிந்து கலாச்சாரத்தை மதிக்காமல் இருக்கிறீர்கள்; நாங்கள் பலமுறை எச்சரித்தும், மதிக்காமல் இருந்துள்ளீர்கள். ஆகவே, உங்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் காவல்துறையில் புகார் கொடுக்க உள்ளோம்‘‘ என்று மிரட்டி உள்ளனர்.
இதனை அடுத்து ஆசிரியர்கள் அச்சப்பட்டு, அந்தப் பள்ளிக்கு வருவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.