கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.12.2024

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*திமுக – இடதுசாரிகள் உறவு, தேர்தல் கூட்டணிக்கு அப்பாலும் நிலைத்து நிற்கும், நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். * ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி உருவாகியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், முதலமைச்சரின் பல்வேறு திட்டங்களை அந்த மாவட்டத்தில் தொடங்கியதன் மூலம், இடைத் தேர்தல் பணியை திமுக தொடங்கி விட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 21ஆம் நூற்றாண்டில் பாசிசம் என்ற தலைப்பில் அய்தராபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு விவாதித்தனர். இந்த கருத்தரங்கை அரவிந்த் மெமோரியல் டிரஸ்ட் ஏற்பாடு செய்து இருந்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இன்று டிசம்பர் 30ஆம் தேதி பஞ்சாபில் மறியல் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். போராட்டம் மாநிலம் தழுவிய ஆதரவைப் பெறுகிறது * 2027 உ.பி. தேர்தலுக்கு முன்னதாக கோவில்-மசூதி தகராறுகள் வாக்காளர்களை மதரீதியாக ஒருமுகப் படுத்துவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது. நடைபெற்ற இடைத்தேர்தலில், முதலமைச்சர் யோகி, பிரிந்தால் நாம் அழிந்து விடுவோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றார் என்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தி டெலிகிராப்:

* பகவத் கீதையின் மகத்துவம் குறித்து நான்கு படிப்புகளுக்கு டில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது, மதச் சார்பற்ற கல்வி நிறுவனத்தின் பன்மைத்துவ நெறி முறைகளுக்கு எதிரானது என சில கல்வியாளர்கள் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*சம்பல் மாவட்டத்தில் அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் இல்லத்தில் சிவலிங்கம் இருக்கலாம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் செய்தியாளர் சந்திப்பில் கிண்டலாக தெரிவித்தார். .- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *