மக்களவை தலைவரிடம் ராகுல்காந்தி கோரிக்கை

viduthalai
2 Min Read

பா.ஜ.க. உறுப்பினர்கள் கூறிய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்!

புதுடில்லி, டிச.12- மக்களவைத் தலைவா் ஓம் பிர்லாவை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தனக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தெரிவித்த அவதூறு கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

குற்றச்சாட்டு

மக்களவையில் கடந்த 5.12.2024 அன்று பேசிய பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே, ‘திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் குற்றப் புலனாய்வு ஊடக தளம் (ஓசிசிஆா்பி) வெளியிடும் அறிக்கைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த ஊடக தளத்துக்கும் அமெரிக்க பெரும் பணக்கார முதலீட்டாளா் ஜார்ஜ் சோரஸுக்கும் தொடா்பு உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சாத்தியமாகிவரும் இந்தியாவின் வெற்றிப் பயணத்தை சீா்குலைக்க அமெரிக்க பெரும் பணக்கார முதலீட்டாளரும் ‘ஓசிசிஆா்பி’ தளமும் காங்கிரஸும் கூட்டாக முயற்சிக்கின்றன’ என்று குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சில கேள்விகளையும் எழுப்பினார். இதையடுத்து, ஜார்ஜ் சோரஸுக்கும் ராகுல் மற்றும் காங்கிரஸுக்கும் தொடா்புள்ளதாக, அவையில் பாஜக உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினா்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை அலுவல்கள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவாதம்

அதானி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக என் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பாஜக கூறுகிறது. ஆனால், நான் ஆவேசமடையப் போவதில்லை. மக்களவையில் டிச.13-ஆம் தேதிமுதல் 2 நாள்களுக்கு அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதம் நடைபெற வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது.
எனவே, மக்களவைத் தலைவரை சந்தித்து, எனக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தெரிவித்த அவதூறு கருத்துகளை நீக்குமாறு கோரினேன். அக்கருத்துகளை ஆய்வு செய்வதாக, மக்களவைத் தலைவா் தெரிவித்துள்ளார். அனைத்து விதமான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் பாஜக தொடா்ந்து கூறுகிறது. ஆனால், அவை சுமுகமாக நடைபெற வேண்டுமென்பதே காங்கிரஸின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *