தமிழர் தலைவர் தாலாட்டு நாள் வாழ்த்து!

1 Min Read

ஈரோட்டுப் பெரு
நெருப்பை
இன்று
வரை
அணையாமல்
அடை
காக்கும்
தொடர்
விழிப்பில்
தூங்காத
பேருழைப்பர்!

காவிக்குத்
தமிழ்
நாட்டைச்
காவு
கொடுக்காமல்
காப்பாற்றும்
போருழைப்பில்
இந்தியத்தை
வியக்க
வைக்கும்
எம்
அய்யா
நேருழைப்பர்!

நொடிக்கு நொடி
நூல் தடுக்கும்
நோய்ச்
செயல்கள்
அத்தனையும்
நொறுக்கி
விடும்
படிக்கு
இவர்
நூலடுக்கில்
நுட்பங்கள்
பல
படித்த
பேரறிவில்
பெரியாரின்
பெருமிதத்தை
நிலை
நாட்டும்
தாயுழைப்பர்!

பெரியாரைத் தெரியாதார்
பேருலகில்
எவருமிலை
எனுமந்த
ஒளிச் சேர்க்கை
உருவாக்கித்
தந்ததிலே
‘இவன் தந்தை’ எனுமந்த
வள்ளுவனின்
சேயுழைப்பர்!
தொண்ணூறைக்
கடந்தாலும்
தொண்டைக்
கரகரப்புத்
துளியும்
இல்லாமல்

இரவின்றிப்
பகலின்றி
இழையளவும்
சோர்வின்றி

தூய
தலைவர்
வழி
தொண்டாற்றி
வரும்
உங்கள்
தொடர்
உழைப்பை
வணங்குகிறோம்!

எங்கள்
துறைமுகத்து ஏற்புடைய
கலங்கரையே!
உங்கள்
தாலாட்டு நாள் வாழ்த்தி
தந்தை
வழி
நடப்பதற்கே
தங்கள் விரல்பிடிக்கத்
தயங்காமல்
இணங்குகிறோம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *