கோவா: பன்னாட்டுத் திரைப்பட விழாவை ஹிந்துத்துவா களமாக மாற்றிய மோடி அரசு!

Viduthalai
2 Min Read

பனாஜி, நவ.28 55ஆவது இந்திய பன்னாட்டுத் திரைப் படத் திருவிழா பாஜக ஆளும் கோவா மாநில தலைநகர் பனாஜியில் (நவம்பர் 20 முதல் 28 வரை) நடைபெற்று வருகிறது. “இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் – எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் 81 நாடுகளில் இருந்து 180 பன்னாட்டுத் திரைப்படங்கள் திரை யிடப்பட்டு வருகின்றன.

காவி அரங்கம்
பன்னாட்டவிலான அறி ஞர்கள், எழுத்தாளர்கள், இயக்கு நர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றுள்ள இந்த கோவா பன்னாட்டுத் திரைப் பட விழாவை மோடி அரசு ஹிந்துத்துவா கொண்டாட்டக் களமாக மாற்றியுள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) தலைமையேற்று நடத்தும் இந்த பன்னாட்டுத் திரைப்பட விழாவை பிரதமர் மோடிக்கு நெருக்கமான போலிச்சாமியார் சிறீசிறீ ரவிசங்கர் துவங்கி வைத்தார். பன்னாட்டுத் திரைப்பட விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், ஹனுமான், மகாவிஷ்ணு உள்ளிட்ட உருவ வடிவங்களும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கோவா பன்னாட்டுத் திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி வண்ணம் பூசப்பட்டு இருந்தது.

சாவர்க்கர் திரைப்படம்
சுதந்திரப் போராட்டத்தின் பொழுது பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து தண்டனை தளர்வு பெற்றவரும், காந்தியார் கொலை வழக்கில் ஒரு குற்றவாளியுமான சாவர்க்கரை நாயகனாகச் சித்தரித்த “சுதந்திர வீர் சாவர்க்கர்” இந்திய பனோரமாவின் (இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா) தொடக்கப் படமாக திரையிடப்பட்டுள்ளது. காந்தி யாரை இழிவுபடுத்தியும், நேதாஜி, அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் சாவர்க்கரின் உபதேசப்படியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர் எனவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் “சுதந்திர வீர் சாவர்க்கர்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஹிந்துத்துவா கொண்டாட்டம்
இந்திய திரையுலகில் மண்ணை கவ்விய, 370 ஆவது சட்டதிருத்தத்தை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை மோதல் நிலமாக்கிய மோடி அரசாங்கத்தின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் “ஆர்டிகிள் 370” என்ற ஹிந்தி திரைப்படம், மஹாவிஷ்ணுவின் அவதாரங்களின் கதையான “மஹாவதார் நரசிம்மா” என்ற 3டி அனிமேஷன் திரைப்படம், சிறீகிருஷ்ணனின் அவதாரப் படமான “கல்கி” 2898 ஏடி” என்ற தெலுங்கு திரைப்படம், கொங்கணின் விநாயகர் திருவிழாவை மய்யப்படுத்தும் “கரத் கணபதி” என்ற மராத்தி திரைப்படம் உள்ளிட்ட ஹிந்துத்துவாவை போற்றும் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கண்டனங்கள்
பன்னாட்டுத் திரைப்பட விழாவை ஹிந்துத்துவா கொண்டாட்டக் களமாக மாற்றிய மோடி அரசின் செயல்பாட்டிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *