பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள்!

1 Min Read

பிஜேபி ஆளும் பீகார் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு

புதுடில்லி, நவ.20 பீகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மாநில அரசு பதிலளிக்க கடைசி வாய்ப்பாக 6 வாரங்கள் காலக்கெடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரின் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண், கிசன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் கட்டுமானத்தில் இருந்த புதிய பாலங்களும் அடங்கும்.மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு சாலை கட்டுமானம் மற்றும் ஊரகப் பணிகள் துறைகளுக்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் உள்ள பாலங்களின் பாதுகாப்பு மற்றும் ஆயுள் குறித்த பொதுநல வழக்கை வழக்குரைஞா் பிரஜேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில், ‘இந்தியாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக பீகார் உள்ளது. மாநிலத்தின் பரப்பளவில் 73.06 சதவீதம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுவதால் பேரழிவு ஏற்படுவதுடன் மக்களின் உயிருக்கும் அது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, மாநிலத்தில் உள்ள பழைய பாலங்கள் மற்றும் புதிதாக கட்டப்படும் பாலங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உயா்நிலை குழு அமைக்க வேண்டும். ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வகுத்துள்ள விதி முறைகளின்படி நிகழ்நேர கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில அரசு மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் பதிலளிக்க கடந்த ஜூலை 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *