16.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: தைவானை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் அமைக்கிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜார்கண்ட் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ராகுல் ஹெலிகாப்டர் தாமதப்படுத்தப்பட்டது; சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் தாக்கீது.
* நான் மோடியை பார்த்தோ அல்லது அவரது 56 அங்குல மார்பை பார்த்தோ அஞ்சவில்லை. அவர் பெரும்பணக்காரர்களின் கைப்பாவையாக உள்ளார் என ராகுல் காந்தி பேச்சு.
* நாட்டை மோடி பிளவுபடுத்துகிறார் – சரத் பவார் தாக்கு.
* இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிபரின் கட்சி அமோக வெற்றி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த எந்த மதமும் கட்டளையிடவில்லை: திருவிழாக்களில் யானைகளை கட்டுப்படுத்த வேண்டும், கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு.
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாஜகவும், மோடியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா பேச்சு.
* பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாளில், அவரது அபிலாஷைகள் – சுதந்திரம், நீதி, அடையாளம் மற்றும் கண்ணியம் – நம் நாட்டின் இளைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 8 ஈரானியர்கள் கைது!
தி டெலிகிராப்:
* உ.பி. மாநிலம் ஜான்சி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தனர், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள் (‘படேங்கே தோ கதேங்கே) என்ற உ.பி. முதலமைச்சர் யோகி சாமியார் முழக்கத்திற்கு மகாராட்டிரா பாஜகவினர் பங்கஜ் முண்டே, அசோக் சவான் எதிர்ப்பு.
* தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மகப்பேறு இறப்புகள் பாதியாக குறைந்துள்ளதாகவும், குழந்தை இறப்பு ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
– குடந்தை கருணா