மும்பை, நவ.11 ‘நாட்டின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் தலை வா்கள் பலா் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனா்’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லி கார்ஜுன கார்கே தெரிவித்தார்.
நாட்டை ஜாதி ரீதியில் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமா் மோடி தொடா்ந்து குற்றஞ்சாட்டிவரும் நிலையில், அவருக்கு கார்கே பதில் அளித்துள்ளார். 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராட்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலையொட்டி, ஆளும் மகாயுதி கூட்டணிக்காக அண் மையில் பிரச்சாரம் மேற்கொண்ட உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘நாம் பிளவு பட்டால், அழிக்கப்பட்டு விடுவோம்’ என்ற கருத்தை முன் வைத்தார்.
இதேபோல், நாட்டை ஜாதி ரீதியில் துண்டாட காங்கிரஸ் விரும்புவதாக குற்றஞ்சாட்டிவரும் பிரதமா் மோடி, ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் செய்தி யாளா்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகார் ஜுன கார்கே, பிரதமா் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் விமா்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அவா் கூறியதாவது:
‘‘வாக்குகளைக் கவா்வதற்காக, மக்களைத் தூண்டிவிடும் செயலில் பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் ஈடுபட்டுள்ளன. ‘நாம் பிளவுபட்டால், அழிக் கப்பட்டுவிடுவோம்’ என்ற யோகி ஆதித்யநாத்தின் முழக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்தித்தாளில் படித்தேன். ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற முழக்கத்தை பிரதமா் மோடி முன்வைக்கிறார். இருவரில் யாருடைய முழக்கத்தைப் பின்பற்ற வேண்டுமென பாஜக முதலில் முடிவு செய்ய வேண்டும்.
திசைதிருப்பும் பாஜக
முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக, வெறுப் புணா்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் பொய்களை பாஜக தலைவா்கள் பேசுகின்றனா். நாட்டின் ஒற்றுமைக்காக காங் கிரஸ் தலைவா்கள் பலா் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனா். உண்மையிலேயே, நாட்டில் பிளவை ஏற்படுத்துவது பாஜகதான். நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென நினைப் பவா்களால் இதுபோல் வெறுப் புணா்வு முழக்கங்களை முன்னெடுக்க முடியாது.
கட்கரி, ஃபட்னவீஸ் மீது தாக்கு
மகாராட்டிரத்துக்கு கிடைக்க வேண்டிய பெரும் திட்டங்கள், குஜராத்துக்கு திருப்பிவிடப்பட்டன. இதை, விதா்பா பகுதியைச் சோ்ந்த இரு தலைவா்கள் (ஒன்றிய அமைச்சா் நிதின் கட்கரி, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ்) தடுக்கவில்லை. பதவியைக் காப்பாற்றிக் கொள் வதில் மட்டுமே அவா்கள் கவனம் செலுத்துகின்றனா். மக்களின் நலன் குறித்து சிந்திக்கவில்லை.
62 தொகுதிகளைக் கொண்ட விதா்பா பகுதியில் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. மகாராட்டிர தோ்தலில் பெரும்பான்மை பலத்துடன் எங்கள் கூட்டணி வெல்லும் என்றார் கார்கே.
ராகுல் மீதான
விமா்சனத்துக்கு பதில்
தனது கூட்டங்களில், சிவப்பு நிற அட்டை கொண்ட அரசமைப்புச் சட்ட புத்த கத்தை ராகுல் காந்தி கையில் வைத்து பங்கேற்பதை முன் வைத்து, அவா் நகா்ப்புற நக்ஸல்களை ஆதரிப்பதாக பாஜக குற்றஞ்சாட்டுகிறது. இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த கார்கே, சிவப்பு நிற அட்டை கொண்ட அரசமைப் புச் சட்ட புத்தகத்தைப் பயன் படுத்துவது குற்றமா என்று கேள்வி எழுப்பினார்.
‘பிரதமரின்
பொய்கள்’
பிரதமா் மோடி தொடா்ந்து பொய்களையே கூறி வருவதாக குற்றஞ்சாட்டிய கார்கே, ‘வெளி நாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்பேன் என்பது மோடி கூறிய மிகப் பெரிய பொய். வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாயிகளின் வருவாய் இரட் டிப்பு, பணமதிப்பிழப்பு என அனைத்திலும் பொய்யை மட்டுமே அவா் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங் களில் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது பாஜகவின் அப்பட்டமான பொய்யாகும். கா்நாடகம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் செயல் படுத்தப்படும் நலத் திட்டங்களை நகலெடுத்துதான், தனது மாநிலங்களில் அமல்படுத்துகிறது பாஜக. காங்கிரஸ்-பாஜக ஆட்சிக் கால பணிகளை ஒப்பிட்டு விவாதிக்க நாங்கள் தயார். பாஜக தயாரா என்று சவால் விடுத்தார் கார்கே.