ராஜஸ்தான் அரசின் மூடத்தனம் கல்வித்துறையின் வினோத உத்தரவு

Viduthalai
1 Min Read

ஜெய்ப்பூர், நவ.11 மாநிலம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளின் வாயில்களுக்கு ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வைட் கோல்டு, ஆரஞ்சு பிரவுன் வண்ணம் பூசுமாறு ராஜஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் மாநில கல்லூரி கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
காயகல்ப் என்ற திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 20 கல்லூரிகளில் சோதனை அடிப்படையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது அவர்களின் சிந்தனை நேர்மறையாக இருக்கும் வகையில் கற்கும் சூழல் இருக்க வேண்டும். தமது கல்வியில் அடுத்தக்கட்டம் என்ன என்பதை சிந்திக்கும் வகையில் அமைய வேண்டும்.

எனவே, கல்லூரிகள் மாணவர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ஆரோக்கியமான கல்விச்சூழல் இருக்க வேண்டும். அதற்காக 20 கல்லூரிகளில் உள்ள வாயில்களில் வெண்மை (வைட் கோல்டு), ஆரஞ்சு பிரவுன் நிறங்களில் பெயிண்ட்டை 7 நாட்களுக்குள் பூச வேண்டும். பெயிண்ட் பூசப்பட்ட பின்னர், அதை ஒளிப்படம் எடுத்து கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *