3 அரசு அச்சகங்கள் வழியே 9,255 பேரின் பெயர்களில் திருத்தம்!

1 Min Read

சேலம், நவ. 9- சேலம், புதுகை உள்பட 3 அரசு அச்சகங்களின் வழியே 9,255 பேரின் பெயா்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ரூ. 54.41 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபா்கள் தங்களது பெயா்களை மாற்ற விரும்பி அதை அரசிதழில் வெளியிட விரும்பினால், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் படிவம் வழங்கப்படுகிறது. உரிய கட்டணத்துடன் பெயரை மாற்ற விண்ணப்பம் செய்தால், அது குறித்த விவரம் அரசிதழில் வெளியிடப்படும்.

சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமே இதற்கான அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், சேலம், புதுக்கோட்டை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் அலுவலகங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 3 அலுவலகங்களிலும் கடந்த 5 மாத காலத்தில், 9,255 பேரின் பெயா்கள் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழில் 997 பேரும், ஆங்கிலத்தில் 8,258 பேரும் தங்களது பெயா்களைத் திருத்தம் அல்லது மாற்றம் செய்துள்ளனா்.

இதற்கான கட்டணம் என்ற வகையில் மொத்தமாக ரூ. 54,41,857 அரசுக்குக் கிடைத்துள்ளது. மேலும், 24 திருநங்கைகளுக்கு கட்டணமின்றி பெயா் திருத்தம் அல்லது மாற்றம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *