3 அரசு அச்சகங்கள் வழியே 9,255 பேரின் பெயர்களில் திருத்தம்!

viduthalai
1 Min Read

சேலம், நவ. 9- சேலம், புதுகை உள்பட 3 அரசு அச்சகங்களின் வழியே 9,255 பேரின் பெயா்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ரூ. 54.41 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபா்கள் தங்களது பெயா்களை மாற்ற விரும்பி அதை அரசிதழில் வெளியிட விரும்பினால், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் படிவம் வழங்கப்படுகிறது. உரிய கட்டணத்துடன் பெயரை மாற்ற விண்ணப்பம் செய்தால், அது குறித்த விவரம் அரசிதழில் வெளியிடப்படும்.

சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமே இதற்கான அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், சேலம், புதுக்கோட்டை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் அலுவலகங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 3 அலுவலகங்களிலும் கடந்த 5 மாத காலத்தில், 9,255 பேரின் பெயா்கள் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழில் 997 பேரும், ஆங்கிலத்தில் 8,258 பேரும் தங்களது பெயா்களைத் திருத்தம் அல்லது மாற்றம் செய்துள்ளனா்.

இதற்கான கட்டணம் என்ற வகையில் மொத்தமாக ரூ. 54,41,857 அரசுக்குக் கிடைத்துள்ளது. மேலும், 24 திருநங்கைகளுக்கு கட்டணமின்றி பெயா் திருத்தம் அல்லது மாற்றம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *