சரத்பவார் முக அமைப்பை விமர்சித்த பிஜேபி கூட்டணி தலைவரின் அநாகரிக அரசியல்

1 Min Read

மும்பை, நவ.8- மராட்டிய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் தங்களது மகாவிகாஸ் அகாடி கூட் டணி வெற்றி பெறும் என்றும், மராட்டியத்தின் முகத்தை மாற்றுவேன் என்றும் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) தலைவர் சரத்பவார் பேசியிருந்தார்.
இந்நிலையில் சாங்கிலி மாவட்டம் ஜாட் பகுதியில் நேற்று முன்தினம் (6.11.2024) பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி சார்பில் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியை சேர்ந்த கிராந்தி சங்கட்னா எம்.எல்.சி. சதாபாவ் ‘கோட் பேசினார். அப்போது அவர், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத்பவாரின் முக அமைப்பை இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். அப்போது துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். சதாபாவ் கோட்டின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு காட்சிப்பதிவை வெளியிட்டார்.
இருப்பினும் சரத்பவார் பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவரது அண்ணன் மகனும், சரத்பவார் கட்சியை பிளவுப்படுத்தியவருமான துணை முதலமைச்சர் அஜித்பவார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *