அய்ந்து ஆண்டுகளில் 575 விழுக்காடு சொத்து அதிகரித்த பிஜேபி வேட்பாளர் மகாராட்டிரா தேர்தலில் போட்டி

1 Min Read

மும்பை, நவ.4 மகா ராஷ்டிர சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பராக் ஷா கடந்த 2002-ஆம் ஆண்டில் மேன் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை தொடங் கினார்.
பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக வலம்வந்த அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பாஜக சீட் வழங்கியது. இதையடுத்து, கட்கோபார் கிழக்கு பகுதி நகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பராக் ஷா 2019-இல் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த பராக் ஷா 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் கட்கோபார் கிழக்கு தொகுதியில் போட்டியிட பாஜக அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்த அவர் தன்னிடம் உள்ள சொத்து விவ ரங்களை தேர்தல் ஆணையத்திடம் பிரமா ணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளார்.
அதில், பராக் ஷா தனக்கு ரூ.3,300 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். எம்எல்ஏ.வாக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பராக் ஷாவின் சொத்து மதிப்பு 575 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அசையும் சொத்துகள் ரூ.3,315.52 கோடியும், அசையா சொத்துகள் ரூ.67.53 கோடியும் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 தேர்தலில் வேட்பு மனு தாக்கலின்போது தனது நிகர சொத்து மதிப்பு ரூ.550.62 கோடி மட்டுமே இருப்பதாக பராக் ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *