முதலமைச்சர் இல்லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்

1 Min Read

புதுடில்லி, அக். 26- ஜம்மு-காஷ்மீரில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லாமல் துணை நிலை ஆளுநரால் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதற்கு மேனாள் ஒன்றிய அமைச்சா் ப.சிதம்பரம் கடுமையாக விமா்சித்துள்ளாா். தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அதிகாரம் பெற யூனியன் பிரதேசத்திற்கு மாநில தகுதி மீட்டெடுக்கவேண்டிய அவசியத்தையும் அவா் வலியுறுத்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் கடந்த 20.10.2024 அன்று இரவு கந்தா்பால் மாவட்டம் ககாங்ஹிா் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்றில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுவந்த தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூா் மருத்துவா் உள்ளிட்ட 7 போ் கொல்லப்பட்டனா். இது குறித்த ஆய்வு கூட்டம் கடந்த 23.10.2024 அன்று யூனியன் பிரதேஷ ஆளுநா் மனோஜ் சின்கா தலைமையில் உயா் அதிகாரிகள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சமீபத்தில் பதவியேற்ற ஜம்மு-காஷ்மீா் முதலமைச்சர் ஒமா் அப்துல்லா அழைக்கப்படவில்லை.

இது குறித்து மேனாள் ஒன்றிய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சரான ப.சிதம்பரம் ’ எக்ஸ் ’ சமூக வலைத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளாா். அது வருமாறு:
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின்னா் ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையில் யூனியன் பிரதேசம் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் தொடா்பாக ஒளிப்படம் வெளியானது. அதில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட முதலமைச்சர் (ஒமா் அப்துல்லா) இடம் பெறவில்லை எனத் தெரிகிறது. ஜம்மு-காஷ்மீா் முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. அதே சமயத்தில் தற்போதைய ஜம்மு-காஷ்மீா் சட்டத்தின் கீழ், காவல்துறையும் பொது ஒழுங்கும் துணை நிலை ஆளுநா் அதிகாரத்திற்கு உள்பட்டவை. மக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனிக்க ஒரு முதலமைச்சரையும் அரசையும் தோ்வு செய்துள்ளனா். ஆனால் முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை. இதனால் தான் ஜம்மு-காஷ்மீா் அரை மாநிலம் என்று வா்ணிக்கப்படுகிறது, ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில தகுதியையும் உடனடியாக மீட்டெடுப்பது அவசியம் என அந்த பதிவில் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *