ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும்: கனடா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் உரை

2 Min Read

ஒட்டாவா,அக்.25- ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கனடாவில் தடை செய்ய வேண்டும் எனவும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியுள்ளனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதி யான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான வழக்கில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மீது கனடா உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இதனை இந்தியா மறுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து டில்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற இந்தியா உத்தரவிட்டது. கனடா அரசும் இந்திய தூதரக அதிகாரிகள் 6 பேரை கனடாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இந்த சர்ச்சையில் இந்தியா – கனடாவிற்கு இடையிலான உறவுகள் தொடர்ந்து விரிசல டைந்து மோதல் போக்கு அதி கரித்துள்ளது. இந்த மோதல் போக்கைத் தொடர்ந்து அண்மைக் காலமாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதர வாளர்கள் இந்திய பிரதமர் மோடியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கடந்த 21.10.2024 அன்று கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த அவசர கூட்டத்தில் தீவிரவாத அமைப்பைப் போல செயல்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கனடாவில் தடை செய்ய வேண்டும் என எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீக்கிய தலைவரும் புதிய ஜன நாயகக் கட்சியின் (என்டிபி) தலைவருமான ஜக்மீத் சிங் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்வதுடன், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளார்.
என்.டி.பி.கட்சி ஹீத்தர் மெக்பெர்சன் எம்.பி. பேசிய போது, இந்தியாவுக்கு ஆயு தங்கள் உள்ளிட்ட ராணு வத்தள வாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்த வேண்டும்.

அதோடு சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் செய்கிற, இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுத்து வருகிற இந்தியாவைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள் கனடாவிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றார்.
அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உல கம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வன்முறை செய்து ஒரு தீவிரவாத அமைப்பு போலவே செயல்பட்டு வருகிறது. கனடாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை
ஆர்.எஸ்.எஸ். செயல்படுத்துகிறது. எனவே அந்த அமைப்பைத் தடை செய்யவேண்டும் என வலி யுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *