இலங்கையில் உள்ள இசுரேல் மக்கள் வெளியேற இசுரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தல்!

Viduthalai
1 Min Read

கொழும்பு, அக்.24 இலங்கையில் உள்ள இசுரேல் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இசுரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இசுரேல் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் இசுரேலைச் சேர்ந்த யூத மக்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில், இசுரேலுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இசுரேலியர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளதாவது,
”இலங்கையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் நடக்க வாய்ப்புள்ளது.

அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட எல்லையோரப் பகுதியான அறுகம் குடா மற்றும் தெற்கு, மேற்கு கரையோரம் இருக்கும் இசுரே லியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் அல்லது குறைந்தபட்சம், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகம் இருக்கும் தலைநகர் கொழும்புவுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.இலங்கையில் உள்ள இஸ்லாமிய மக்கள் இசுரேலைச் சேர்ந்த யூத மக்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடலாம் என இசுரேலின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.ஹீப்ரு மொழி எழுத்துகளுடன் கூடிய டீ-சர்ட் மற்றும் மதம் சார்ந்த தேசிய அடையாளங்களை வெளிப்படுத்தும் எந்தவொரு விசயத்தையும் செய்ய வேண்டாம் என இசுரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *